fbpx

11 நாட்களில் 13,560 கி.மீ..!! ஓய்வெடுக்காமல் பறந்த பறவை..!! புதிய சாதனை..!!

11 நாட்களில் 13,560 கிலோமீட்டரை ஓய்வெடுக்காமல் பறந்து ஒரு பறவை தற்போது சாதனை படைத்துள்ளது.

வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் (bar-tailed godwit) என்ற பறவை இனம் உள்ளது. குளிர் காலத்தின் பனி அதிகம் ஆகும் நேரத்தில் அது ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். மற்ற பறவை இனங்களை போல் இது அடிக்கடி ஓய்வெடுக்காது. எப்போதாவது தரையிறங்கும். ஆனால், இது தண்ணீரில் தரை இறங்காது. அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. இதன் உடல் அமைப்பு தண்ணீரில் மிதக்க ஏற்றது அல்ல. அதனால், தண்ணீரில் தெரியாமல் விழுந்தால் கூட பறவைக்கு இறப்பு தான். இதனாலேயே இந்த பறவை நீண்ட தூரம் நிற்காமல் பறக்கும்.

11 நாட்களில் 13,560 கி.மீ..!! ஓய்வெடுக்காமல் பறந்த பறவை..!! புதிய சாதனை..!!

தாஸ்மேனியாவைச் சேர்ந்த எரிக் வோஹ்லர் என்ற ஆர்வலர், கின்னஸ் உலக சாதனையிடம், “பறவைகள் தொடர்ந்து இரவும் பகலும் பறக்கும் போது அதன் உடல் எடையில் பாதி அல்லது அதற்கு மேற்பட்டவற்றை இழந்திருக்கலாம்” என்று கூறினார். இடப்பெயர்ச்சி பறவைகள் பறக்கும் தூரம் காலம் ஆகியவற்றை செயற்கைக்கோள் குறியீடுகளை வைத்து பறவை ஆர்வலர்கள் கண்காணிப்பர். அப்படி தொடர்ந்து நீண்ட தூரம் பறக்கும் பறவைகளை கண்டுபிடித்து அதை பதிவு செய்வர். அதிக தூரம் பறக்கும் பறவைகளை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் குறிப்பிடுவர். அப்படி 2020இல் இதே காட்விட் இன பறவை ஒன்று விடாமல் 217 மைல்களைத் தாண்டி சாதனை படைத்தது. அதை இப்போது “234684” என்ற டேக் எண் கொண்ட பார்-டெயில்ட் காட்விட் (லிமோசா லப்போனிகா), முறியடித்துள்ளது.

உணவு அல்லது ஓய்வுக்காக நிற்காமல் அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவுக்கு 13,560 கிலோமீட்டர்கள் (8,435 மைல்கள்) பறந்து சாதனைப் படைத்துள்ளது. அக்டோபர் 13, 2022 அன்று தொடங்கிய அதன் பயணம் 11 நாட்கள் மற்றும் ஒரு மணி நேரம் வரை தொடர்ந்தது. காட்விட் கீழ் முதுகில் இணைக்கப்பட்ட 5G செயற்கைக்கோள் குறிச்சொல் மூலம் தான் இந்த தூரம் கணக்கிடப்பட்டுள்ளது. இப்போது இதுதான் லேட்டஸ்ட் இடைவிடாத நீண்ட தூர பயணம் செய்த பறவை. ஆனால், யாரை பார்க்க அப்படி விடாமல் போனதோ தெரியவில்லை…!

Chella

Next Post

சன் டிவி சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகை..?? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Fri Jan 6 , 2023
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் பிரியதர்ஷினி அந்த தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர்களில் எதிர்நீச்சலும் ஒன்று. ஒளிபரப்பான சில மாதங்களிலேயே மக்கள் கொண்டாடும் அளவுக்கு அதிகபடியான ரசிகர் கூட்டம் அந்த தொடருக்கு உண்டு. இளைய தலைமுறையினர் பலரும் மீம்ஸ்களாக எதிர்நீச்சல் மாமனார் கதாபாத்திரத்தை பகிரத் தொடங்கினர். அந்த அளவுக்கு வயது […]
சன் டிவி சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகை..?? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

You May Like