fbpx

கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்..!! என்ன காரணம் தெரியுமா..?

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று 11ஆம் நாளாக அவை கூடியது. அப்போது, நாடாளுமன்றத்தில் நேற்று கலர் புகைக்குண்டுகள் வீசியதால் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், மதியம் 2 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அப்போது நாடாளுமன்றம் சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் உள்பட 5 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவை நடவடிக்கையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.

Chella

Next Post

குடிப்பழக்கத்திற்கு மக்கள் அடிமையாகனும்..!! அதிக வருமானம் சம்பாதிக்கனும் என டாஸ்மாக் நினைக்காது..!!

Thu Dec 14 , 2023
குடி என்னும் தீய பழக்கத்திற்கு மக்கள் ஆளாக வேண்டும். அதன் மூலம் வருமானம் ஈட்டவேண்டும் என பார் ஒப்பந்ததாரர்கள், டாஸ்மாக் நிர்வாகம் என யாரும் நியாயமான எதிர்பார்ப்பை கொண்டிருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வனப்பாதுகாப்பு வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காலி மது பாட்டில்களை விவசாய நிலம் உள்ளிட்டவற்றில் வீசப்படுவதை தடுக்கும் வகையில், மதுபானத்தை பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, காலி பாட்டிலை திருப்பி கொடுத்தால் […]

You May Like