fbpx

டிசம்பரில் 18 நாட்கள் வங்கிகள் விடுமுறை!… ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

டிசம்பர் மாதத்தில் மொத்தம் 18 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளின் வேலை நேரம் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நம்முடைய பணப்பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட முடியும். வங்கிகளின் வேலை நாட்கள் எப்போது, விடுமுறை நாட்கள் எப்போது என்று நாம் முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது. அப்போது வீண் அலைச்சலை நாம் தவிர்க்கலாம். அந்த வகையில் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவிருக்கும் டிசம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்கும், எத்தனை நாட்கள் விடுமுறை என்று பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 23 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை. அதேபோல, ஞாயிற்று கிழமைகள் விடுமுறை என்பதால் டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய நான்கு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை. டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பொதுவான விடுமுறை என்பது ஒரே ஒரு நாள் மட்டுமே. டிசம்பர் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டி நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

டிசம்பர் 1 – மாநிலத் தொடக்க நாள் காரணமாக அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். டிசம்பர் 4 – புனித பிரான்சிஸ் சேவியர் திருவிழா காரணமாக கோவாவில் வங்கிகள் மூடப்படும். டிசம்பர் 12 – பா டோகன் நெங்மிஞ்சா சங்மா காரணமாக மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். டிசம்பர் 13 – லோசுங்/நாம்சுங் காரணமாக சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். டிசம்பர் 14 – லோசுங்/நாம்சுங் காரணமாக சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

டிசம்பர் 18 – உ சோசோ தாமின் நினைவு தினத்தை முன்னிட்டு மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். டிசம்பர் 19 – விடுதலை தினத்தையொட்டி கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். டிசம்பர் 26 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் காரணமாக மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் வங்கிகள் திறக்கப்படாது. டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் காரணமாக நாகாலாந்தில் வங்கிகளுக்கு விடுமுறை. டிசம்பர் 30 – உ கியாங் நங்பாவைக் கருத்தில் கொண்டு மேகாலயாவில் வங்கிகள் திறக்கப்படாது.

Kokila

Next Post

ஐபிஎல் 2024!… தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இதோ!

Mon Nov 27 , 2023
ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம், வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்து அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. அதற்கான கடைசி நாளான நேற்று மாலை 10 அணிகளும் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்த அதிகாரப்பூர்வ பட்டியலில் விடுவிக்கப்பட்ட […]

You May Like