fbpx

மக்களே கவனம்.. 19 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை மையம் எச்சரிக்கை…

நீலகிரி, கோவை, திருப்பூர்‌ உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம்‌, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌
ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..

வரும் 23,24, 25 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்றும் நாளையும் குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோரப்பகுதிகளில், பலத்தக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

பாஜக தலைவர் அண்ணாமலை..கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு… காவல் உயர் அதிகாரிகள் மீது புகார்..

Thu Jul 21 , 2022
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு அங்குள்ளவர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில் பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் காவல்துறையினர் மற்றும் உளவுத்துறை, சரிவர செயல்படவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினர் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால், கலவரத்தை தடுத்திருக்கலாம் என்று கருத்து […]
அடுக்கடுக்கான புகார்கள்..!! ஆப்பு வைக்கும் டெல்லி தலைமை..!! பாஜகவில் இருந்து அண்ணாமலை நீக்கம்..?

You May Like