fbpx

90 ஆண்டு கால வரலாற்றில் 19-வது முறை..!! மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!!

தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3-வது முறையாக முக.ஸ்டாலின் மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்தார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை, ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். கடந்தாண்டு முன்கூட்டியே மே 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.

ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 28ஆம் தேதி வரை திறக்கப்படும் தண்ணீரின் வாயிலாக குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமான அளவில் திருப்திகரமாக இருப்பதால் உரிய தேதிக்கு முன்னதாகவே மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து தொடர்ச்சியாக 3-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் அணையின் மேல்மட்ட மதகுகளை இயக்கி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார். காவிரி அன்னையைப் போற்றும் வகையில், ஆற்றில் மலர்களையும் அவர் தூவி வணங்கினார்.

முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அளவு படிப்படியாக 10 ஆயிரம் கன அடி வரை திறந்து விடப்படும். குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள், மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி, அணை திறப்பதற்கு உரிய நாளான ஜூன் 12 ஆம் தேதியான இன்றுடன் 19 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக 11 முறையும், காலதாமதமாக 60 முறையும் அணை திறக்கப்பட்டுள்ளது. 90 ஆண்டு கால வரலாற்றில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக கடந்த ஆண்டு மட்டுமே கோடை காலமான மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

சென்னை மெட்ரோ பயணிகளே..!! பார்க்கிங் கட்டணம் அதிரடியாக உயருகிறது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Mon Jun 12 , 2023
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களில், ரயிலில் பயணம் செய்யாமல் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன நிறுத்தங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், வாகனங்களை எத்தனை மணிநேரம் நிறுத்திவைக்கிறோம் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், பல மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாதவர்களும் கூட வாகனங்களை நிறுத்துகின்றனர். குறிப்பாக, பரங்கிமலை, கிண்டி, […]

You May Like