fbpx

வேலைக்கு விண்ணப்பித்தது 2.50 லட்சம் பேர்..!! ஆனால், வேலை கிடைத்தது 32 பேருக்கு தான்..!! இது குஜராத் பரிதாபம்..!!

குஜராத் மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெவ்வேறு துறைகளில் அரசு வேலைக்காக பதிவு செய்த இரண்டரை லட்சம் இளைஞர்களில் 32 பேருக்குத்தான் வேலைக் கிடைத்தது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அரசு வேலைக்காக அகமதாபாத்தில் 22 பேர், பாவ்நகரில் 9 பேர் மற்றும் காந்தி நகரிலிருந்து ஒருவர் என மொத்தம் 32 இளைஞர்கள் மட்டுமே குஜராத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குஜராத் சட்டப்பேரவையில் இதுபற்றி எம்.எல்.ஏ. ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது, குஜராத்தில் உள்ள 29 மாவட்டங்களில் சுமார் 2,38,978 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். அதேபோல் பகுதிநேர கல்வி பயின்ற 10,000 பேர் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்திருக்கின்றனர். மேலும், அமைச்சர் வெளியிட்ட தகவலின்படி குஜராத்தின் ஆனந்தில் 21,633 பேர் அரசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதேபோல் வதோராவில் 18,732 பேரும், அகமதாபாத்தில் 16,400 பட்டதாரி இளைஞர்களும், தேவ்பூமி துவாரகாவில் 2,362 பேரும் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். அவ்வளவு பேர் வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும்போது வெறும் 32 பேருக்கு மட்டுமே இந்த 2 ஆண்டுகளில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். எம்.எல்.ஏ வின் இந்த கேள்விக்கு மாநில தொழில்துறை அமைச்சர் பல்வந்த் சிங் மழுப்பியவாறே பதிலளித்தார். குஜராத் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 46 வேலைவாய்ப்பு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த அலுவலகங்களின் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஏற்பாடு போதிய அளவு மக்களுக்கு சென்றடையவில்லை. இந்த பிரச்சனையை போக்கவும், மக்கள் எளிதில் தகவலை பெறுவதற்கும் ஒரு செயலியை கூடிய விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பதிலளித்தார். எம்எல்ஏ கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் தடுமாறிய அமைச்சர் பல்வந்த் சிங், ஒருவழியாக மழுப்பிக்கொண்டே பதிலளித்தார். மேலும், குஜராத் இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் தடுமாறும் நிலை அதிகம் ஏற்பட்டுள்ளதாவும் ரிப்போர்ட் கூறுகிறது.

Chella

Next Post

"ரூ.6,564/- கோடியை திருப்பி செலுத்துமா பாஜக.?" உச்ச நீதிமன்றம் வைத்த செக்..!!

Thu Feb 15 , 2024
2017-18 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஒரு சில மாற்றங்களுடன் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக தீர்ப்பை அறிவித்த 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி தடை செய்தனர். எந்த அரசியல் கட்சிகளுக்கு […]

You May Like