fbpx

சென்னையில் மட்டும் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டுபிடிப்பு!!!

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 38.83 லட்சம் பேர். சென்ற 2021 ஆண்டு 3.2 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 2 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலி வாக்காளர்களை அடையாளம் காண தேர்தல் ஆணையம் புதிய மென்பொருளை உருவாக்கியது. இதை பயன்படுத்தி போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. மேலும் போட்டோ அடையாளத்தை அடிப்படையாக கொண்டு கம்ப்யூட்டர் முலம் போலி வாக்களர்களை கண்டுபிடித்துள்ளது தேர்தல் ஆணையம். அத்துடன் வாக்குச்சாவடி அளவிலான ஊழியர்கள் மூலம் வீடு வீடாக ஆய்வு நடத்தி தவறாக சேர்க்கப்பட்டிருப்பவர்கள் நீக்கப்படுகிறார்கள். விரைவில் போலி வாக்காளர்களை முற்றிலுமாக நீக்கும் வகையில் நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகளில் போலி வாக்காளர்கள் மிகவும் அதிகமாக உள்ளர்கள். வேளச்சேரி தொகுதியில் மொத்தம் உள்ள 3.05 லட்சம் வாக்காளர்களில், 24 ஆயிரத்து 414 பேர் போலி வாக்காளர்களாம். அதேபோல் விருகம்பாக்கம் தொகுதியில் மொத்தம் 2.76 லட்சம் வாக்காளர்களில், 23,073 பேர் போலி வாக்காளர்களாம்.

மேலும் சைதாப்பேட்டை தொகுதியில் மொத்தம் 2.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 19,883 பேர் போலி வாக்காளர்களாம். அண்ணாநகர் தொகுதியில் மொத்தம் 2.72 லட்சம் வாக்காளர்கள், இதில் 19,506 போலி வாக்காளர்கள் என்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் துறைமுகம் தொகுதியில்தான் குறைந்த எண்ணிக்கையில் , அதாவது 10,082 போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Kathir

Next Post

60 அடி உயரத்திலிருந்து தண்டவாளத்தில் விழுந்த மக்கள்!!! ரயில் வராததால் பெரும் சேதம் தவிர்ப்பு... மகாராஷ்டிர ரயில்வே நடை மேம்பாலம் விபத்து!!!

Mon Nov 28 , 2022
மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார் ஷா ரயில்வே நிலையத்தின் நடைபாதைப் பாலம் 60 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. நடைமேடை எண் 1 மற்றும் 4-ஐ இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்தப் பாலம் பல ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது.இந்நிலையில், நேற்று(நவ.27) மாலை 5 மணி அளவில் அந்தப் பாலத்தின் தகடுகள் திடீரென உடைந்து விழுந்தன. இதனால் அந்த பாலம் வழியே நடந்துசென்றவர்கள் நிலைதடுமாறு கீழே தண்டவாளங்கள் மீது விழுந்தனர். […]

You May Like