fbpx

‘பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு 2 மணி மண்டபங்கள் கட்டப்படும்’..!! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

பசும்பொன்னில் 3 நாட்கள் நடைபெறும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் இன்று (அக்டோபர் 28) முதல் தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 1908 அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார் முத்துராமலிங்க தேவர். இன்றைய தலைமுறையினருக்கு அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து முத்துராமலிங்க தேவர் இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்து மறைந்தவர். அவர் 1963 அக்டோபர் 30 ஆம் தேதி மறைந்தார்.

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 3 நாட்கள் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறும். இதில் தென்மாவட்டத்தில் உள்ள மக்கள் திரளாக பங்கேற்பது வழக்கம். வயது வித்தியாசமில்லாமல் மக்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மேள, தாளத்துடன் பொங்கலிட்டு, நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

இந்நிலையில், முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இதில் நாளை 2-வது நாளில் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்றைய தினம் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்தும் வகையில், ரூ.1.42 கோடியில் ஒரு மண்டபம் புதிதாக அமைக்கப்படும் என்றும் மிக முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், மற்றொரு மண்டபம் ரூ.12.54 லட்சம் மதிப்பில் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Chella

Next Post

மிகப்பெரிய உருக்கு சுரங்கத்தில் தீவிபத்து..!! 21 பேர் பலி..!! பலரை காணவில்லை..!! பெரும் பரபரப்பு..!!

Sat Oct 28 , 2023
கஜகஸ்தானில் உள்ள மிகப்பெரிய உருக்கு சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரகண்டாவில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்த இந்த தீவிபத்தில் சிக்கி மேலும், 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது சுரங்கத்திற்குள் 252 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 23 பேரை காணவில்லை என்றும் அதன் உரிமையாளரான ஆர்செலர் மிட்டல் டெமிர்டாவ் கூறியுள்ளார். தீ விபத்திற்கான காரணம் அறியப்படாத நிலையில், […]

You May Like