fbpx

’2 கண்டிஷன்’..!! ’ஒத்துக்கிட்டா கூட்டணி’..!! ’இல்லைனா தனித்துப் போட்டி’..!! கமல் கட்சி அதிரடி அறிவிப்பு..!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மவுரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்கள் நலனிலும் மக்கள் நீதி மய்யம் எந்த சமரசமும் செய்துகொள்ளாது. கமலில் கொள்கைகளுடனும், சிந்தனைகளுடன் ஒத்த கருத்து கொண்டவர்களுடன் தான் கூட்டணி அமைய முடியும்.

இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. இந்த 2 நிபந்தனைகளுடன் யாரும் ஒத்துவராவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயங்கமாட்டோம். கூட்டணி தொடர்பாக ஒரு குழு அமைத்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் தேர்தல் பணிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

Tue Jan 23 , 2024
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த ஜனவரி 8ஆம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்குவதற்கான டோக்கன்களை விநியோகம் செய்தனர். அதன்படி, ஜனவரி 10ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளின் வாயிலாக ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பின்னர், ஜனவரி 13 மற்றும் 14ஆம் தேதிகளில் டோக்கன் பெறாதவர்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ அரிசி, ஒரு […]

You May Like