தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி தேர்வு முடிவடைகிறது. இதற்கிடையே, கடந்த மாதம் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேற்று நிறைவடைந்தது. இதில், சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார். இதனைத் தொடர்ந்து இன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையி,ல் வருகின்ற 10ஆம் தேதி முதல் பிளஸ் டூ மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. வரும் பத்தாம் தேதி தொடங்கும் விடைத்தாள் திருத்தும் பணிகள் 21ஆம் தேதி முடிவடைகின்றன. அதனைத் தொடர்ந்து மே 5ஆம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.