fbpx

இதுவரையில் வங்கிகளுக்கு திரும்பி வந்த 2000 ரூபாய் நோட்டுகள் இத்தனை கோடியா…..! அடேங்கப்பா…..!

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரையில் வங்கிகள் மூலமாக 1.80 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதாவது நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் இதுவரையில் 50 சதவீதம் மாற்றுதல் திரும்ப வந்துவிட்டதாக ஆர்பிஐ தெரிவித்து இருக்கிறது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியானது முதல் இதுவரையில் 1.80 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2023 ஆம் வருடம் மார்ச் மாதம் 31ஆம் தேதி நிலவரத்தின் அடிப்படையில் நாட்டின் 3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் தொடக்கத்தில் இருந்தனர் இந்த நோட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்ற மாதம் புழக்கத்திற்கு இருக்கின்ற 2000 ரூபாய் நோட்டுகள் ஆபாச தரப்படுவதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது. வங்கிகளில் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை செலுத்தி சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் 2023 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் இதற்கு காரணம் அவகாசம் வழங்கியும் ஆர்பிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது

Next Post

அரசு தர முனைந்த பொறுப்பை துறந்தார் - யார் இவர்???

Thu Jun 8 , 2023
திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை தலைமைச் செயலாளராக நியமிக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், அவரது சாய்ஸ்சாக  அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டு வைக்கப்பட்டிருந்த இறையன்பு இருந்தார்.  எந்த அழுத்தத்திற்கும் வளைந்து கொடுக்காதவர், மக்களின் மன நிலையை அறிந்தவர், அதோடு மனிதநேயம் கொண்ட பண்பாளரான அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளராக தேர்வு செய்ததை எண்ணி எதிர்க்கட்சிகளே வியந்தன. ஆட்சி அமைந்தது முதல் இரவு, பகல் பாராது […]
’தேசியக்கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு’..! மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..!

You May Like