“பிரதம மந்திரி முத்ரா யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.20,55,000 கடன் வழங்குவதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
”பிரதம மந்திரி முத்ரா யோஜனா 2023” திட்டன் கீழ் ரூ.20,55,000 கடன் வழங்க தயாராக இருப்பதாகவும், குடிமக்கள் தங்களின் செல்போன் எண்களைச் சரிபார்த்து, சில நிமிடங்களில் கடன் தகுதியைச் சரிபார்க்க வேண்டுமெனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வைரலாகி வரும் இந்த செய்தி போலியானது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த செய்தி போலியானது என்றும், இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் PIB கேட்டுக் கொண்டுள்ளது.
“உங்கள் வங்கி/தனிப்பட்ட விவரங்களைப் பகிருமாறு கேட்கும் மின்னஞ்சல்கள்/எஸ்எம்எஸ்களுக்குப் பதிலளிக்க வேண்டாம்” என்று PIB எச்சரிக்கை விடுத்துள்ளது.