fbpx

22 வயது ஆசிரியைக்கு மயக்க மருந்து..!! பெட்ரூமில் படுக்க வைத்து பெண் தலைமை ஆசிரியை செய்த அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை நீலாங்கரையை அடுத்துள்ள ஈசிஆர் பகுதி ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கீதா (40). இவர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சங்கீதா பணிபுரியும் பள்ளியில், 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடர்பாக திட்டமிட்டு விவாதிப்பதற்காக நேற்று முன்தினம் பணியில் புதிதாக சேர்ந்த ஆசிரியையை தனது வீட்டிற்கு வரும்படி சங்கீதா அழைத்துள்ளார். இதையடுத்து, சங்கீதாவின் வீட்டிற்குச் சென்ற பெண் ஆசிரியையை படுக்கை அறையில் உட்கார வைத்து குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார். குளிர்பானம் குடித்த அடுத்த சில நிமிடங்களில் இளம்பெண் ஆசிரியை மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் பெண் ஆசிரியையிடம் தலைமையாசிரியர் சங்கீதா பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். மயக்கம் தெளிந்து விழித்து எழுந்த போது அவரது உடலில் ஆங்காங்கே காயத்துடன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்து தப்பித்துச் சென்ற இளம்பெண் ஆசிரியை, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து திருவான்மியூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், தலைமை ஆசிரியை சங்கீதாவை நேற்று கைது செய்தனர்.

Read More : செல்போனில் கொட்டிக் கிடந்த அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்கள்..!! பலே ஸ்கெட்ச் போட்ட இளம்பெண்..!!

English Summary

Principal Sangeetha sexually abused a female teacher.

Chella

Next Post

”இதை அன்றே செய்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்”..!! பரபரப்பை கிளப்பிய எஸ்.பி.வேலுமணி..!!

Tue Oct 29 , 2024
He may have gone to America for treatment when his health was failing. Had he been treated like that, he would have been alive for much longer.

You May Like