தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கின்ற அசல்வாடியை சேர்ந்தவர் குமரேசன் (46) விவசாய ஆன இவர் தன்னுடைய உறவினர்களின் நிலத்தை விற்ற 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தன்னுடைய மாடுகளை விற்ற 2.50 லட்சம் என ஒட்டுமொத்தமாக 27.50 இலட்சத்தை தன்னுடைய வீட்டில் வைத்திருந்தார்.
இந்த நிலையில் தான் நேற்று அதே ஊரில் இருக்கின்ற தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு குமரேசனும் அவருடைய மனைவியும் சென்றுள்ளனர் சற்று நேரத்திற்கு பிறகு திரும்பி வந்து வீட்டில் பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 27.50 லட்சம் ரூபாய் ரொக்கம், 9 பவுன் நாகை உள்ளிட்டவை திருடுபோய் இருந்தது தெரியவந்தது.
திருடிய மர்ம நபர்கள் கைரேகை பதிய கூடாது என்பதற்காக ஆங்காங்கே மிளகாய் பொடிகளை தூவி சென்றுள்ளனர். இது தொடர்பாக குமரேசன் அரூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார் இந்த புகாரின் பேரில் ஆரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.