fbpx

தர்மபுரி அருகே விவசாயி வீட்டில் 27.50 லட்சம் பணம் மற்றும் நகை கொள்ளை….! காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை….!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கின்ற அசல்வாடியை சேர்ந்தவர் குமரேசன் (46) விவசாய ஆன இவர் தன்னுடைய உறவினர்களின் நிலத்தை விற்ற 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தன்னுடைய மாடுகளை விற்ற 2.50 லட்சம் என ஒட்டுமொத்தமாக 27.50 இலட்சத்தை தன்னுடைய வீட்டில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் தான் நேற்று அதே ஊரில் இருக்கின்ற தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு குமரேசனும் அவருடைய மனைவியும் சென்றுள்ளனர் சற்று நேரத்திற்கு பிறகு திரும்பி வந்து வீட்டில் பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 27.50 லட்சம் ரூபாய் ரொக்கம், 9 பவுன் நாகை உள்ளிட்டவை திருடுபோய் இருந்தது தெரியவந்தது.

திருடிய மர்ம நபர்கள் கைரேகை பதிய கூடாது என்பதற்காக ஆங்காங்கே மிளகாய் பொடிகளை தூவி சென்றுள்ளனர். இது தொடர்பாக குமரேசன் அரூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார் இந்த புகாரின் பேரில் ஆரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இனி வாரத்தில் ஒருமுறை இது கட்டாயம்....! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.....!

Sun Jul 16 , 2023
தமிழக அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்கான பல்வேறு பொருட்களை உணவுடன் சேர்த்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த வருகின்றது அதன் அடிப்படையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைப்பதற்காக […]

You May Like