fbpx

28 மாணவிகள்..!! கை, கால்களை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த கேமராமேன்..!! 2-வது மனைவி உடந்தை..!! அதிரும் ஆந்திரா..!!

ஆந்திராவில் பெண்கள் விடுதி நடத்தி வரும் கேமராமேன் ஒருவர் அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஆந்திராவிலும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஏலூர் பகுதியில் தனியார் மாணவிகள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. எர்ரகுண்ட பள்ளி பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் இந்த விடுதியை நிர்வகித்து வந்த நிலையில், அவர் புகைப்படக்காரராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த விடுதியின் வார்டனாக சசிக்குமாரின் இரண்டாவது மனைவியும், பாதுகாவலராக அவரது மருமகளும் செயல்பட்டு வந்திருக்கின்றனர். அந்த பெண்கள் விடுதியில் பள்ளி சிறுமிகள் முதல் கல்லூரி பெண்கள் வரை 45 பேர் தங்கி படித்து வரும் நிலையில், அதில் இரண்டு மாணவிகள் சமீபத்தில் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், சசிக்குமார் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து போலீஸார் அந்த விடுதி பெண்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அங்குள்ள பல பெண்களை அழகாக போட்டோ எடுப்பதாக கூறி அழைத்துச் சென்ற சசிக்குமார் ஒரு வீட்டில் வைத்து கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அங்குள்ள 28 பெண்கள் சசிக்குமாரால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கு சசிக்குமாரின் இரண்டாவது மனைவி பனிஸ்ரீ உதவியாக இருந்துள்ளார். இதையடுத்து சசிக்குமார், அவரது மனைவியை போலீஸார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : மைனர் பொண்ணு..!! பாய்ந்தது போக்சோ..!! நடன இயக்குனர் ஜானி இடை நீக்கம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

English Summary

28 women were raped by Sasikkumar, it came to light during the investigation. Sasikumar’s second wife Panisree has helped in this.

Chella

Next Post

கோயிலில் வெடித்த சண்டை..!! அசிங்க அசிங்கமாக திட்டிய ஜிபி முத்து..!! வெளியான வீடியோ..!!

Thu Sep 19 , 2024
An enraged GB Muthu scolds Mahesh with very degrading and ugly words.

You May Like