fbpx

இந்தியாவில் உள்ள 30 முதலமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா..?

நாட்டின் தற்போதைய 30 முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி அதிகபட்சமாக ரூ.510 கோடி சொத்துக்களைக் கொண்டுள்ளார் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள 13 முதலமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது..

நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 30 முதல்வர்களின் சுயப் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றால் இந்த தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. 28 மாநில முதல்வர்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் – டெல்லி மற்றும் புதுச்சேரி – முதல்வர்களும் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தற்போது முதல்வர் இல்லை.

கிரிமினல் வழக்குகள் உள்ள முதலமைச்சர்கள்: மாநில சட்டசபைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஆய்வு செய்யப்பட்ட 30 முதலமைச்சர்களில் 13 (43 சதவீதம்) முதல்வர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அறிவித்துள்ளனர். அதில் 13 (43 சதவீதம்) முதலமைச்சர்கள் கொலை, கொலை முயற்சி, கடத்தல், கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்..

கோடீஸ்வர முதல்வர்கள் : நாட்டின் 30 முதல்வர்களில் 29 (97%) பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்… அதில் குறிப்பாக ரூ. 510 மற்றும் அடிப்படை மதிப்புள்ள சொத்துக்களுடன், ஆந்திர முதலமைச்சர், ஜெகன்மோகன் ரெட்டி, ரூ. 163 கோடி மதிப்பிலான சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.. அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு 2-வது இடத்தில் உள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், 63 கோடி ரூபாய் சொத்துக்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான் மிகக் குறைவான சொத்துக்களை கொண்டுள்ளார்.. 15 லட்சம் மதிப்பிலான சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் தங்களது ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Maha

Next Post

சொந்த ஊருக்கு போறீங்களா..? 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எப்போது முதல் தெரியுமா..?

Wed Apr 12 , 2023
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பண்டிகைகள், தொடர் விடுமுறைகளின் போது சென்னையில் உள்ள வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.. அந்த வகையில் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை வருகிறது.. இதை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாட்கள் விடுமுறை வருகிறது.. மேலும் ஏப்ரல் 22-ம் தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது.. […]
அரஆகஸ்ட் 3 முதல் அரசு விரைவு பேருந்துகளில் புதிய வசதி..! ஆயத்தப் பணிகள் தீவிரம்..!சு விரைவுப் பேருந்துகளில் பயணிப்போரின் கவனத்திற்கு..! பயணிகள் இனி இப்படியும் புகார் அளிக்கலாம்..!

You May Like