fbpx

2-வது நாளாக வெளியேறிய கரும்புகை..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!! சரவணா ஸ்டோரில் பரபரப்பு..!!

மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 10 மாடி கொண்ட சரவணா ஸ்டோர்ஸ் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கடையின் 9-வது தளத்தில் உணவகம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கிருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் கடை ஊழியர்களும், கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பொதுமக்களும் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். அப்போது வெளியேறிய கரும்புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் மாட்டுத்தாவணி பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், 2-வது நாளான் இன்று காலை மீண்டும் கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து 2-வது நாளாக கரும்புகை வெளியேறியதால் சுற்று வட்டார மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஈரோடு இடைத்தேர்தல்..!! டெபாசிட்டை தக்க வைத்த அதிமுக..!! நிம்மதியில் எடப்பாடி பழனிசாமி..!!

Thu Mar 2 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உட்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. மொத்தம் பதிவான 398 […]

You May Like