fbpx

‘விஜய் கூட இருக்கும்போது 3 மாதம் கர்ப்பம்’..!! ’அவருக்காக தான் இதை பண்ணேன்’..!! மாளவிகா அதிர்ச்சி தகவல்..!!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா என்கிற ஸ்வேதா மேனன். இந்த படம் சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த மாளவிகா, சுமேஷ் மேனன் என்பவரை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், இரு குழந்தைகளை பெற்றுக்கொண்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

இதையடுத்து, மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த மாளவிகா, கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்து பிரபலமானார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கசப்பான சினிமா அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், இயக்குனரின் பெயர் குறிப்பிடாமல், அந்த இயக்குனர் கதை சொல்லும் போது வேறுமாதிரி கூறி, படப்பிடிப்பு தளத்தில் அதற்கு மாற்றாக வேறு மாதிரியாக எடுத்தார்.

ஆனாலும், அதற்கு ஒப்புக்கொண்டு நடித்தேன். முத்த காட்சிகள் கூட முன்பே சொல்லாமல், அதை செய்ய சொல்லி பண்ணினேன். கதைக்கு முக்கியம் என்று கூறி இயக்குனர் சமாதானம் செய்து பண்ண வைத்தார். அதன்பின் தான் அந்த சீன் மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. அந்த இயக்குனர் யார் என்று வெளியில் சொல்ல முடியாது. அதுதான் என்னுடைய கசப்பான அனுபவமாக இருந்தது.

மேலும், நடிகர் விஜய்யின் குருவி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெரிவித்தேன். அறிமுக பாடலில் நடனமாட ஓகே சொன்ன சில மாதத்தில் நான் கர்ப்பமாகிவிட்டேன். 3 மாதம் கர்ப்பமாக இருந்ததால் அப்பாடலில் நடனமாடக்கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், விஜய் படம் என்ற ஒரு காரணத்திற்காக மாடல் அழகி போல் அங்கும் இங்குமாக நடப்பது போல் நடித்தேன். இது தனக்கு ஏமாற்றமாக இருந்தது. நடிகர் விஜய் தென்னிந்திய ஹிருத்திக் ரோஷன்” என்று கூறியிருக்கிறார்.

Chella

Next Post

வரும் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! புரட்டிப்போடும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

Fri Nov 24 , 2023
வரும் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை தமிழ்நாட்டில் அநேக […]

You May Like