fbpx

அதிமுக பிரமுகரின் கழுத்தில் கத்தியை வைத்த 3 பேர்..!! 80 சவரன் நகை, ரூ.38 லட்சம் அபேஸ்..!!

புதுச்சேரியில் அதிமுக பிரமுகரின் கழுத்தில் கத்தியை வைத்து, 80 சவரன் நகை, ரூ.38 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகர் 6-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி (60). இவர், அதிமுக நிர்வாகியாக உள்ளார். இவர், நேற்றிரவு 8.30 மணியளவில் வீட்டின் எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 3 நபர்கள் அவரிடம் முகவரி கேட்டு விசாரித்துள்ளனர். அதற்கு கருணாநிதி பதிலளித்த போது, 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை அவரது கழுத்தில் வைத்து, அவரது வீட்டின் முதல் மாடிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், வீட்டில் பீரோவில் இருந்த ரூ. 38 லட்சம் பணம் மற்றும் 80 சவரன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ரெயின்போ நகரில் அதிமுக பிரமுகரின் கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

சொகுசு பங்களாவில் நடிகைகளுடன் உல்லாசம்..!! லட்சங்களை திருடி செலவு செய்த திருடன் சிக்கியது எப்படி..?

Mon Mar 20 , 2023
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சுந்தர் என்பவர் விதைகள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 10ஆம் தேதி நள்ளிரவில் சுந்தரின் கடையில் புகுந்து ரூ.4.70 லட்சத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரில் பண்ருட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை குறித்து துப்பு கிடைக்காததால், போலீசார் விசாரணையை விரிவுப்படுத்தினர். அதன்படி, திண்டுக்கல் அருகே ஒரு மர்ம நபரின் நடமாட்டம் […]

You May Like