fbpx

82 நாடுகளில் 345 மில்லியன் மக்கள் உணவின்றி தவிக்கின்றனர்.. ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

உலகம் முன்னெப்போதும் இல்லாத அவசரநிலையை எதிர்கொள்வதாக ஐ.நாவின் உலக உணவு திட்ட இயக்குநர் எச்சரித்துள்ளார்.

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி இதுகுறித்து பேசினார்.. அப்போது “ 82 நாடுகளில் 345 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வது, கொரோனாவுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம்.. 45 நாடுகளில் உள்ள 50 மில்லியன் மக்கள் மிகக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பசியின் அலை இப்போது பசியின் சுனாமியாக மாறி உள்ளது” என்று கூறினார்,

கொரோனா

மேலும் பேசிய அவர் “ அதிகரித்து வரும் மோதல்கள், தொற்றுநோயின் பொருளாதார அலை விளைவுகள், காலநிலை மாற்றம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் உக்ரைன் போர் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்… பிப்ரவரி 24 ரஷ்யா தனது அண்டை நாடு மீது படையெடுத்ததில் இருந்து, உணவு, எரிபொருள் மற்றும் உரச் செலவுகள் உயர்ந்து 70 மில்லியன் மக்களை பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளி உள்ளது..

ரஷ்யாவால் தடுக்கப்பட்ட மூன்று கருங்கடல் துறைமுகங்களில் இருந்து உக்ரேனிய தானியங்களை ஏற்றுமதி செய்ய ஜூலை மாதம் ஒப்பந்தம் செய்த போதிலும், ரஷ்ய உரங்களை மீண்டும் உலக சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்தாலும், இந்த ஆண்டு பல பஞ்சம் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது.

ஏமனில் ஆண்டுகள் நடைபெற்ற போருக்கு பிறகு, “சுமார் 19 மில்லியன் மக்கள், 10 பேரில் ஆறு பேர், கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர், 160,000 பேர் பேரழிவை எதிர்கொள்கின்றனர், மேலும் 538,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. வடக்கு எத்தியோப்பியாவின் டைக்ரே, அஃபர் மற்றும் அம்ஹாரா பகுதிகளில், 13 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உயிர் காக்கும் உணவு தேவை.. வடகிழக்கு நைஜீரியாவில், 4.1 மில்லியன் மக்கள் அதிக அளவிலான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். எனவே மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை அதிகரிக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

திமுகவின் பொய் வாக்குறுதிகள்..! விரைவில் 100 யூனிட் இலவச மின்சாரமும் ரத்து..? அதிர்ச்சி..!!

Fri Sep 16 , 2022
”விரைவில் 100 யூனிட் இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படலாம்” என முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரியில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”கடந்த 10 ஆண்டுகளாக ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சி காலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், […]
புதுசா வீடு வாங்கப் போறீங்களா..? மின் இணைப்பு குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

You May Like