fbpx

35 துண்டுகளான காதலியின் உடல்..!! 18 நாட்கள் பிரிட்ஜில் வைத்து மாநிலம் முழுவதும் வீசிய காதலன்..!! திகில் சம்பவம்..!!

லிவ் இன் முறையில் உடன் வாழ்ந்த காதலியை கொலை செய்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் டெல்லியை அதிரவைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வாலிபர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர், மும்பையில் கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அங்கு உடன் பணிபுரியும் ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்த நிலையில், இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இருவரின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், ஷ்ரத்தா – அஃப்தப் இருவரும் டெல்லிக்கு குடிபெயர்ந்து அங்குள்ள மெஹ்ராலி என்ற பகுதியில் வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

35 துண்டுகளான காதலியின் உடல்..!! 18 நாட்கள் பிரிட்ஜில் வைத்து மாநிலம் முழுவதும் வீசிய காதலன்..!! திகில் சம்பவம்..!!

டெல்லி சென்றதும் ஷ்ரத்தா தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளார். பெற்றோர் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அது நடக்காத நிலையில், சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் ஷ்ரத்தா டெல்லியில் வசிப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் மதன் டெல்லி சென்று தனது மகள் வசிக்கும் வீட்டை ஒரு வழியாக தேடி கண்டுபிடித்துள்ளார். அங்கு பார்த்தால் வீடு பூட்டியிருந்தது. இதனால் தனது பெண்ணை காணவில்லை என்று தந்தை விகாஸ் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உடனடியாக காவல்துறை அஃப்தப்பை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

35 துண்டுகளான காதலியின் உடல்..!! 18 நாட்கள் பிரிட்ஜில் வைத்து மாநிலம் முழுவதும் வீசிய காதலன்..!! திகில் சம்பவம்..!!

தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி ஷ்ரத்தா அஃப்தப்பை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அதற்கு அஃப்தப் சம்மதிக்காத நிலையில், இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அப்படி தான் கடந்த மே 18ஆம் தேதி சண்டையில் அஃப்தப் ஷ்ரத்தாவை தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்கள் பிரிட்ஜில் வைத்து டெல்லியில் ஒவ்வொரு பகுதிகளிலும் வீசி எறிந்துள்ளார். இந்த வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த டெல்லி போலீசார், அஃப்தப் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

மக்களுக்கு நிவாரணம் ரூ.4800 வழங்கப்படும்… அமைச்சர் அறிவிப்பு…

Mon Nov 14 , 2022
மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களின் வீடுகளுக்கு தலா ரூ.4,800 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்தபிறகு அவர் கூறுகையில், ’’மயிலாடுதுறை மாவட்டம், கடலூர், கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]

You May Like