மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இருக்கின்ற செம்பூரைச் சேர்ந்தவர் கணேஷ் ஜெயக்குமார் வர்மா. அதே பகுதியில் ஒரு 38 வயதான பெண் ஆசிரியை தனியாக வீட்டில் வசித்து வந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில், யாரும் இல்லாத சமயமாக பார்த்து வீட்டிற்குள் நுழைந்த கணேஷ் ஜெயக்குமார் வர்மா ஆசிரியையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
மேலும் இது குறித்து வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளார். கணேஷ். ஆனாலும் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். அவருடைய செல்போன் சிக்னலை வைத்து காவல்துறையினர் கணேஷை தீவிரமாக தேடி வந்தனர்.
தன்னுடைய இருப்பிடத்தை அவர் அவ்வப்போது மாற்றிக் கொண்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.