ஆந்திர மாநில பதிவின் கொண்ட ஒரு லாரியில் புதுக்கோட்டை மாவட்ட வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தீவிர சோதனை ஈடுபடுமாறு நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினருக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி கீரனூர் அருகே அம்மா சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வழியாக வந்த ஒரு விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில், கீரனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அங்கே இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சென்னையிலிருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு விற்பனைக்காக ஒன்று செல்வதாக கூறியிருக்கிறார்கள். அதோடு தொடர் விசாரணைக்காக காலையில் ஆஜராவதாக தெரிவித்துவிட்டு சென்ற இருவரும் மீண்டும் திரும்பி வரவில்லை.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் லாரியில் ஏறி சோதனை நடத்தியதில் காய்கறி மூட்டைகளுக்கு நடுவே 200 பண்டல்களில் 388 கிலோ கஞ்சா பட்டணங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். ஆகவே லாரியில் வந்த இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர்களுடைய எங்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதோடு அவர்கள் வழங்கிய முகவரிகளும் போலி என்று தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.