fbpx

Central govt : 4 மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கும் மத்திய அரசு திட்டம்…! ரூ.3 லட்சம் கோடியை கடந்தது…!

பிரதமர் வேளாண் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயன் தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் இத்திட்டத்தின் 16-வது தவணைத் தொகையை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்ததையடுத்து இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட பயன்தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மட்டும் தகுதியுடைய விவசாயிகளுக்கு ரூ.1.75 லட்சம் கோடி அளிக்கப்பட்டது.

விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையிலும், அவர்களின் குடும்பத்தினருக்கு வருவாய் ஆதரவுக்காகவும் பிரதமரின் வேளாண் வருவாய் ஆதரவு திட்டம் 2019 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 4 மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் போது மேலும் 90 லட்சம் புதிய விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : A central government scheme that provides Rs 2000 once a four month

Vignesh

Next Post

குளத்தில் மிதந்து வரும் தீராத நோய்களை திர்க்கும் திருநீர்.! இக்கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?

Fri Mar 1 , 2024
மடவிளாகம் என்ற ஊரில் அமைந்துள்ளது பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில்.  இக்கோயில் 1000 முதல் 1500 ஆண்டுகள் வரை பழமையான சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது. பச்சை நிற ஓட்டுடன் சிவன் காணப்படுவதால் இவரை பச்சோட்டு ஆவுடையப்பன் என்று தான் அழைக்கின்றனர். ஆனால் ஒரு சில கல்வெட்டுகளில் பச்சையோட்டு அருளப்பன் என்று உள்ளது. கோயிலின் பின்பக்கம் சிவன் தன் நகத்தால் கீரியே சுனை ஒன்றை உருவாக்கியுள்ளார். நிகபுஷ்பகரணி என்று அழைக்கப்படும் […]

You May Like