fbpx

Train Accident: சபர்மதி – ஆக்ரா அதிவிரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து…!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சபர்மதி – ஆக்ரா அதிவிரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.

ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள மதார் ரயில் நிலையம் அருகே சூப்பர் பாஸ்ட் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இச்சம்பவம் குறித்து வடமேற்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ சசி கிரண் கூறுகையில், “சபர்மதியில் இருந்து ஆக்ரா நோக்கிச் சென்ற ரயில் இன்று அஜ்மீரின் மதார் ஹோம் சிக்னல் அருகே தடம் புரண்டது. நான்கு ஜெனரல் பெட்டிகளும் ரயிலின் இன்ஜினும் தடம் புரண்டன.

இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், சிறிய காயங்களுக்கு உள்ளானவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவத்தின் போது பல பயணிகள் ரயிலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vignesh

Next Post

வீட்டு வேலை செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை...! டிஎஸ்பி அதிரடியாக கைது...!

Mon Mar 18 , 2024
அசாமில், வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டதாக டிஜிபி ஞானேந்திர பிரதாப் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மாநில காவல் துறை தலைவர் ஞானேந்திர பிரதாப் சிங் கூறுகையில்; கோலாகாட் மாவட்டத்தில் உள்ள லச்சிட் போர்புகன் போலீஸ் அகாடமியில் டிஎஸ்பி நியமிக்கப்பட்டார், அவருக்கு எதிராக டெர்கான் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிங் கூறினார். IPC இன் பிரிவு […]

You May Like