fbpx

காவிரியாற்றில் மூழ்கி 4 கல்லூரி மாணவர்கள் பலி..!! எடப்பாடி அருகே சோகம்..!!

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கல்வடங்கம் காவிரியாற்றில் குளிப்பதற்காக எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 10 பேர் இன்று காலை வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, அதில் 4 மாணவர்கள் மட்டும் திடீரென நீரில் மூழ்கினர். இதையடுத்து, பதறிப்போன சக மாணவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

காவிரியாற்றில் மூழ்கி 4 கல்லூரி மாணவர்கள் பலி..!! எடப்பாடி அருகே சோகம்..!!

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஆற்றில் மூழ்கிய 2 மாணவர்களின் உடல்களை மீட்டனர். மற்ற இருவரின் உடல்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவர்கள் 10 பேரும் வீட்டில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, கல்வடங்கம் வந்துள்ளனர். இங்கு குளித்துக் கொண்டிருந்தபோதுதான் நிலைதடுமாறி பாண்டியராஜன், மணிகண்டன், முத்துசாமி மற்றும் கன்னந்தேரியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 கல்லூரி மாணவர்களும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மற்ற மாணவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

"ட்ரஸ்ல இரத்த கறை...." 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு! திமுக உறுப்பினர் மற்றும் பள்ளி தாளாளர் கைது!

Thu Apr 13 , 2023
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், திமுக நிர்வாகியுமான பக்கிரி சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள மேட்டு காலனியில் வசித்து வருபவர் பக்கிரி சாமி. திமுக நிர்வாகி ஆன இவர் அங்குள்ள நகராட்சி மன்றத்தின் 30 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மேலும் […]

You May Like