fbpx

தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 4 மாநகராட்சிகள்..!! உங்க பகுதியும் இந்த லிஸ்ட்ல இருக்கான்னு பாருங்க..!!

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, புதிதாக உருவாக்கப்பட உள்ள காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மாநகராட்சிகளில் சேர்க்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளின் விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாநகராட்சி :

நாமக்கல் நகராட்சி உடன் வகுரம்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, வள்ளிப்புரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், பாப்பிநாயக்கன்பட்டி, சலுவம்பட்டி, தொட்டிப்படி, மசூர்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

காரைக்குடி மாநகராட்சி :

காரைக்குடி மாநகராட்சியில் கண்டனூர், கோட்டையூர் பேரூராட்சிகளும், சங்காபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட இருக்கிறது.

திருவண்ணாமலை மாநகராட்சி :

திருவண்ணாமலை நகராட்சி உடன் வேங்கிக்கால், சின்னகாங்கேயனூர், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, ஏந்தல், தென் மாத்தூர், கீழ்கசராப்பட்டு, சாவல்பூண்டி, நல்லவன் பாளையம், அடி அண்ணாமலை, தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்மியந்தல், கனந்தம் பூண்டி, ஆணாய்பிறந்தான், அந்தியந்தால், மலப்பாம்பாடி ஆகிய ஊராட்சிகளும், அடி அண்ணாமலை பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதிகளையும் இணைத்து புதிய மாநகராட்சி உருவாக்கப்பட இருக்கிறது.

புதுக்கோட்டை மாநகராட்சி :

புதுக்கோட்டை நகராட்சியுடன், திருக்கட்டளை, திருவேங்கைவாசல், வாகவாசல், திருமலைராய சமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டூர், 9ஏநந்தம்பண்ணை, 9பி நந்தம்பண்ணை, வெள்ளனூர், முள்ளூர் கிராம ஊராட்சிகள், கஸ்பா காடுகள் மேற்கு பகுதி ஆகியவற்றை இணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

Read More : அதிமுக கூட்டணி உடைகிறது..? போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் அதிருப்தி..!! 2 நாட்களில் முடிவு அறிவிப்பு..!!

Chella

Next Post

விடுதலையாகிறாரா செந்தில் பாலாஜி..? வரும் 28ஆம் தேதி முடிவு..!! நீதிபதி அதிரடி..!!

Fri Mar 22 , 2024
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மார்ச் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு […]

You May Like