fbpx

கதிகலங்க செய்த 4 புயல்கள்..!! முடிவுக்கு வரும் வடகிழக்கு பருவமழை..!! இனி வரும் நாட்கள் இப்படித்தான் இருக்கும்..!!

வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் நிலையில், இனி வரும் நாட்களில் பனியும், வெயிலும் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் 4 நான்கு புயல்கள் உருவாகின. அக்டோபரில் அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல் உருவாகி, ஏமன் நாட்டுக்கு சென்றது. வங்கக்கடலில், ‘ஹாமூன், மிதிலி’ என்ற புயல்கள் உருவாகி வங்க தேசத்தில் கரை கடந்தது. ‘மிக்ஜாம்’ புயல் உருவாகி தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை கதிகலங்க செய்தது.

மற்றொரு வளிமண்டல சுழற்சி, தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை ஒரு சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. வரும் நாட்களில், இரவிலும், அதிகாலையிலும் பனிமூட்டம் காணப்படும். பகலில் மிதமான வெயில் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் வடகிழக்கு பருவமழை 44 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 4% கூடுதலாக 46 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில் 2022ஆம் ஆண்டில் சராசரியாக 92 செ.மீ., பெய்தது. அதை விட 18 சதவீதம் கூடுதலாக 2023இல் 109 செ.மீ., மழை பெய்துள்ளது.

Chella

Next Post

இவர்களுக்கு ரூ.3,000 பொங்கல் கருணைக் கொடை, தமிழக அரசு அதிரடி..!

Thu Jan 11 , 2024
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூ.3,000 வழங்கப்படும் என்று தம இழக்க அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்க, கடந்த 5ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட அனைத்து கோயில் பணியாளர்களுக்கும், பொங்கல் கருணைக் கொடையாக 3,000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இந்த […]

You May Like