fbpx

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஜாமீன் கோரி பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் மனுத்தாக்கல்..! நாளை விசாரணை

கனியாமூர் மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேரும் ஜாமீனில் விடுவிக்கக் கோரி விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாகப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சேலம் மத்தியச் சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து நேற்றைய தினம் 5 பேரிடமும் 12 மணி நேரம் விசாரணை செய்து, நள்ளிரவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஜாமீன் கோரி பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் மனுத்தாக்கல்..! நாளை விசாரணை

இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்க கோரி அவர்களது வழக்கறிஞர் ராமச்சந்திரன் விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சாந்தி, ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளையை மேற்கொள்ள உள்ளார். சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பள்ளியின் முதல்வர் சிவசங்கரனுக்கு நரம்பியல் பாதிப்புக்குச் சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகக் கூறி ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் சீனிவாசன் மனுத் தாக்கல் செய்த போது அவரது மனுவைத் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் எங்கே..? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!

Thu Jul 28 , 2022
சர்வதேச நிகழ்வுகளில் நாட்டைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் ஆரம்பத்திலேயே இடம்பெறாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்ட விளம்பரங்களில் ஆரம்பத்திலேயே பிரதமர் மோடியின் படத்தை சேர்க்காதது ஏன் எனக் கேட்டு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் முன்னிலைப் படுத்தப்படுவதாகவும் பாஜகவினர் […]
திமுக-பாஜக கூட்டணி கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்..!!

You May Like