சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், இளம்பெண்களை வைத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சார தொழில் நடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீசஞ்சீப் ராய் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 வெளிமாநில பெண்கள் மீட்கப்பட்டனர்.
விசாரணையில், அதே கட்டிடத்தில் பாலியல் தொழிலுக்காக கிளப்பிலேயே தனியாக டெலிகாலர் என்ற பெயரில் இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் வாட்ஸ் அப் மற்றும் பல்வேறு மசாஜ் சென்டர்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்களை பெற்று அவர்களிடம், இளம் பெண்கள் இருப்பதாக நட்சத்திர ஓட்டல்களில் அறை புக் செய்து பெரிய அளவில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் கிளப் நிர்வாகிகள் இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.