fbpx

500 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றம்…! மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு..‌!

ரயில்வே அமைச்சகம் “TRAINS AT A GLANCE” (ரயில்கள் ஒரு பார்வை) என்ற புதிய காலநேர அட்டவணையை அக்டோபர் 1, 2022 அன்று வெளியிட்டது. இது இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான www.indianrailways.gov.in. –ல் இடம் பெற்றுள்ளது.புதிய காலநேர அட்டவணையின்படி சுமார் 500 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் 10 நிமிடங்கள் முதல் 70 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 130 சேவைகள் (65 இணைகள்) அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக அனைத்து ரயில்களின் சராசரி வேகம் சுமார் 5% அதிகரித்துள்ளது, மேலும் ரயில்களை இயக்குவதற்கு கிட்டத்தட்ட 5% கூடுதல் பாதைகள் கிடைக்க வழிவகுத்தது.2022-23 ஆம் ஆண்டில் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான இந்திய ரயில்வேயின் நேரமின்மை சுமார் 84% ஆகும், இது 2019-20 இல் எட்டப்பட்ட சுமார் 75% நேரத்தை விட 9% அதிகமாகும்.

Vignesh

Next Post

ஹிந்து மத கலாசாரத்தை அழிக்க சதி திட்டம்...! வானதி சீனிவாசன் பகிரங்க குற்றச்சாட்டு...!

Wed Oct 5 , 2022
இயக்குனர் வெற்றிமாறன் பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ வானத்தை சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், வி.சி.க கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், ‘திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது என்று சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது’ என, பேசியுள்ளது கண்டனத்துக்குரியது.தமிழகம் ஹிந்துக்களின் ஆன்மிக பூமியாக இருந்து வருகிறது. அந்நிய […]

You May Like