fbpx

தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள்..!! ஆண்களை விட பெண்களே அதிகம்..!! சத்யபிரதா சாஹு அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். புதிதாக 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மொத்த வாக்காளர்களில் ஆண்கள் 3.03 கோடியும், பெண்கள் 3.14 கோடியும் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.60 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்களும் இப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகளை ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என்றும், இனிமேல் கூட வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்கள் சேர்க்கப்படும் எனவும் சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

Chella

Next Post

நாடாளுமன்ற தேர்தல்..!! களத்தில் இறங்கிய அதிமுக..!! 4 குழுக்களை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு..!!

Mon Jan 22 , 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆகியவற்றை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பெஞ்சமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், […]

You May Like