fbpx

தமிழகத்தில் மேலும் 8 புதிய மாவட்டங்கள்..? சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…

தமிழகத்தில் 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசித்து வருவதாக பேரவையில் அமைச்சர் K.K.S.S.R ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்..

இன்று தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரியதற்கு அமைச்சர் ராமச்சந்திரன் பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர், “ தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்க எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளனர்.. இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதிநிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று தெரிவித்ஹ்டார்

அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டும், நிர்வாக வசதிகளுக்காகவும் மாவட்ட பிரிப்பு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.. கடந்த 2020-ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.. தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உதயம்…..? சட்டசபையில் அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

Sat Apr 1 , 2023
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தில் ஆரணியை தனி தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார். அதேபோல அரசு கொறடா கோவை செழியன் டெல்டா மக்களின் மனம் குளிர கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி […]
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்..! விரைவில் வெளியாகும் அரசாணை..! தமிழக அரசு அறிவிப்பு

You May Like