பஞ்சாப் மாநிலத்தில் 88 வயதான மஹந்த் துவாரகா தாஸ் என்ற முதியவருக்கு ரூ.5 கோடி லாட்டரி பரிசு கிடைத்துள்ளது..
மஹந்த் துவாரகா தாஸ் தனது 13-வது வயதில், 1947-ம் ஆண்டு தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தார். தற்போது சண்டிகரில் உள்ள டெரபஸ்ஸி என்ற பகுதியில் வசித்து வருகிறார்.. சாதாரண குடும்ப பின்னணியை கொண்ட அவர் அடிக்கடி லாட்டரி சீட்டுகளை வாங்கும் பழக்கம் கொண்டவர்.. அந்த வகையில் அவர் சமீபத்தில் பஞ்சாப் அரசு நடத்தும் லாட்டரியில் ஒரு லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார்.. இதில் அவருக்கு ரூ.5 கோடி பரிசு கிடைத்துள்ளது..
தனது பரிசுத்தொகையில் பாதிப் பணத்தை தேரா என்ற அமைப்புக்கு நன்கொடையாக அளிப்பதாகவும், மீதிப்பணத்தை இரு மகன்களுக்கும் சமமாக வழங்க உள்ளதாகவும் மஹந்த் துவாரகா தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் கடந்த 35-40 வருடங்களாக லாட்டரி வாங்கி வருகிறேன்.. ” என்று கூறினார்.
மஹந்த் துவாரகா தாஸுக்கு வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகு 3.5 கோடி ரூபாய் கிடைக்கும் என்று தெரிகிறது.. லாட்டரி உதவி இயக்குநர் கரம் சிங் இதுகுறித்து பேசிய போது “பஞ்சாப் மாநிலம் லோஹ்ரி மகர் சங்கராந்தி பம்பர் லாட்டரி 2023 முடிவுகள் ஜனவரி 16 அன்று அறிவிக்கப்பட்டன. அவர் மஹந்த் துவாரகா தாஸ் முதல் பரிசான ரூ. 5 கோடியை வென்றார். 30% வரி கழிக்கப்பட்ட பின் அவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்..