fbpx

மாதம் ரூ.90,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்..!! பிளஸ்2 போதும்..!!

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம் :

லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) / ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டண்ட் (JSA)

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் (DEO)

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் ‘ஏ’

கல்வித்தகுதி:

நுகர்வோர் அமைச்சகம், உணவு & பொது விநியோகம் அமைச்சகம் மற்றும் கலாசார அமைக்கசத்தின் கீழ் உள்ள துறைகளில் டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் ஏ பணியிடங்கள் வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை கொண்ட பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

LDC/JSA and DEO/DEO ஆகிய பணியிடஙக்ளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு : 18 – 27 வயது உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 02-08-1997 முன்பு பிறந்தவர்களும் 01-08-2006 பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.

சம்பளம் எவ்வளவு..?

லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) / ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டண்ட் (JSA) – ரூ.19,900 – 63,200 வரை

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் (DEO) ரூ. 25,500 – 81,100 மற்றும் Level-5 ரூ. 29,200 – 92,300

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் ‘ஏ’- லெவல் 4- ரூ.. 25,500 – 81,100 சம்பளமாக கிடைக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி..?

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்னப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 07.05.2024 ஆகும். விண்ணப்ப படிவத்தில் திருத்தம் மேற்கொள்ள 10.05.2024 டூ 11.05.2024. தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி / எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை :

கணிணி வழியில் இரண்டு கட்டங்களாக (Tier-I), (Tier-II) தேர்வு நடைபெறும். அதன்பிறகு திறன் தேர்வு / டைப்பிங் டெஸ்ட் & சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும்.

தேர்வு மையங்கள் :

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு அறிவிப்பினை படிக்க… https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice%20of%20CHSLE%202024_05_04_24.pdf இங்கே கிளிக் செய்யவும்.

Read More : சென்னையில் அடுத்த ஒருவாரம் எப்படி இருக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்..!!

Chella

Next Post

அதிகரிக்கும் அம்மை..!! அலட்சியம் காட்டினால் மரணம்..? வராமல் தடுப்பது எப்படி..?

Wed Apr 10 , 2024
பொதுவாக வெயில் நாட்களில் அம்மை நோய் உடல் உஷ்ணத்தினால் வருகிறதென்று நாம் அனைவரும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் கோடை காலத்தில் சுற்றுப்புற சுழலினாலும், குப்பை, சுகாதாரமற்ற, மக்கள் நெருக்கி வாழக்கூடிய இடங்களில் இருக்கக்கூடிய (Varicella Zoster) என்ற வைரஸ் கிருமியால், தாக்கப்பட்டு, பின்பு காற்று மூலம் பரவக்கூடியது ஆகும். முக்கியமாக 10 வயதிற்குள்ள உட்பட சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், பெரும்பாலான குழந்தைகளே இதில் […]

You May Like