fbpx

மாரடைப்பால் உயிரிழந்த 12 வயது சிறுவன்..! மத்திய அரசே இதை விரைவில் பண்ணுங்க – கனிமொழி வலியுறுத்தல்…

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி, சமீபகாலமாக 25 வயதினருக்கே மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை விட மோசமான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்த துஷ்யந்த் என்ற 12 வயது சிறுவன், நேற்றைய தினம் அதிகாலை 5:30 மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுவனது பெற்றோர், மருத்துவமனைக்கு கொடு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 12 வயது சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த தி.மு.க எம்.பி கனிமொழி, “இதுபோன்ற ஒரு சிறு குழந்தையின் இழப்பையும், மாரடைப்பால் சமீப காலமாக நாம் இழந்து கொண்டிருக்கும் பல இளம் உயிர்களையும் பற்றி அறிந்து கொள்வது மிகவும் கவலை அளிக்கிறது. நமது இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இதயச் சிக்கல்கள் மற்றும் கோவிட்-ன் நீண்டகால விளைவுகள் குறித்த ஆராய்ச்சிக்கு மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.

Kathir

Next Post

மாநிலத்தில் பெரும் பதற்றம்...! மத்திய அமைச்சரை கைது செய்த தெலுங்கானா காவல்துறை...!

Thu Sep 14 , 2023
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் 24 மணிநேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்றதால் மத்திய அமைச்சரும் தெலுங்கானா மாநில பாஜக தலைவருமான கிஷன் ரெட்டியை அம்மாநில போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பாஜக தொண்டர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை ஒருவழியாக தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிராக தெலுங்கானா பாஜகவினர் போராட்டங்களை நடத்தினர். இதனால் ஹைதராபாத்தில் பதற்றம் நிலவுகிறது. தெலுங்கானாவில் […]

You May Like