fbpx

உடன்பிறந்த சகோதரனால் கர்ப்பமான 15 வயது சிறுமி..!! நீதிமன்றத்திற்கு சென்ற தந்தை..!! தீர்ப்பு என்ன தெரியுமா..?

கேரளாவில் தனது சகோதரரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 7 மாத கர்ப்பத்தை கலைக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவக் குழு சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையை பரிசீலித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான் ஏஏ, கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்காவிட்டால், பல்வேறு சமூக மற்றும் மருத்துவ சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.

நடந்தது என்ன..?

கேரளாவில் தனது உடன் பிறந்த சகோதரனாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 15 வயது சிறுமி கர்ப்பம் தரித்திருந்ததாக கூறுப்படுகிறது. இச்சூழ்நிலையில் சிறுமியின் பெற்றோர், தனது பெண்ணின் எதிர்காலத்தை முன்னிட்டும் சமூக மற்றும் மருத்துவ சிக்கல்களை முன்னிட்டும் கர்ப்பத்தை கலைக்கும் பொருட்டு மருத்துவரை அணுகியுள்ளனர். வயிற்றிலிருக்கும் கருவை கலைப்பது என்பது மருத்துவ துறைக்கு எதிரான செயல் என்பதால், இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர், தனது பெண் குழந்தையின் வளரும் 7 மாத கருவை கலைக்க அனுமதி வழங்குமாறு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கானது கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இது குறித்து உயர்நீதிமன்றம் மருத்துவரிடம் உரிய அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், மருத்துவ வாரியமானது, “இச்சிறுமிக்கு குழந்தை பிறந்தால், பல்வேறு சமூக சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், சிறுமியின் கர்ப்பம் தொடர்ந்தால் சிறுமியின் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், டீனேஜ் கர்ப்பத்தின் சிக்கல்களால் அவரது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, மைனர் பெண் கர்ப்பத்தை கலைப்பது என்ற மருத்துவ முடிவிற்கு (எம்டிபி) உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறுமி தகுதியுடையவர்” என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

மருத்துவ அறிக்கையை பரிசீலித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான் ஏஏ, “நடந்த உண்மையைக் கருத்தில் கொண்டு, சிறுமி குழந்தையை பெற்றெடுத்தால், பல்வேறு சமூக மற்றும் மருத்துவ சிக்கல்கள் சந்திக்கும் நிலை அவருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், கர்ப்பத்தை கலைக்க மனுதாரர் கோரியுள்ள அனுமதியை தவிர்க்க முடியாதது. எவ்வாறாயினும், மேற்படி பிரச்சனையை நிவர்த்தி செய்ய, இதுபோன்ற சூழ்நிலைகளில், மனுதாரரின் மகளின் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக நிறுத்த அனுமதி வழங்குகிறேன்”என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியின் கர்ப்பத்தை காலதாமதமின்றி கலைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மருத்துவ அலுவலர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Chella

Next Post

தமிழக அரசில் வேலை வாய்ப்பு...! மாதம் ரூ.27,804 ஊதியம்... பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்...!

Tue May 23 , 2023
தமிழக அரசின் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாதுகாப்பு அலுவலர் பணிகளுக்கு என மொத்தம் ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள். தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு […]

You May Like