செங்கல் சூளையில் வேலை பார்க்கும் 17 வயது சிறுவனை, அடிக்கடி தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த 33 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், அருகில் இருக்கும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்த நிலையில், இவர் வேலை பார்க்கும் செங்கல் சூளையில் 17 வயது சிறுவனும் வேலைபார்த்து வந்துள்ளான். இந்நிலையில், சிறுவனுடன் நெருங்கி பழகிய அந்த பெண், ஒரு கட்டத்தில் சிறுவனை தனியாக அழைத்துச் சென்று உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். இதேபோல் அடிக்கடி அந்த சிறுவனை அழைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், அப்பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்வது பிடித்துபோய், சிறுவனும் நெருங்கி பழக ஆரம்பித்தான். ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து, கடந்த 19ஆம் தேதி செங்கல்சூளையில் இருந்து இருவரும் மாயமாகினர். இதனால் சந்தேகமடைந்த சக தொழிலாளிகள் மற்றும் குடும்பத்தினர் அவர்களை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், சேத்தூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில், கன்னியாகுமரியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அவர்களை பிடிக்க முயன்றபோது, தப்பியோட பார்த்தனர். ஆனால், அவர்களை சுற்றிவளைத்த போலீசார், இருவரையும் பிடித்து சேத்தூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், 17 வயது சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் அப்பெண். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். சிறுவனுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.