அமெரிக்காவில் 74 வயதான அன்னே என். நெல்சன்-கோச் என்ற முன்னாள் ஆசிரியை தனது 14 வயது மாணவனை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மன்ரோ கவுண்டியில் 74 வயதான முன்னாள் ஆசிரியை ஒருவர், தனது மாணவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் விசாரித்ததில் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியை ஒருவரின் இந்த தகாத செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிக்கு பல நூறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அக்டோபர் 27 அன்று குற்றவாளிக்கான தண்டனை அறிவிக்கப்படலாம் என்று மன்ரோ கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் கெவின் க்ரோனிங்கர் தெரிவித்துள்ளார்.