fbpx

தறிகெட்டு ஓடிய ஆடி கார்..!! விபத்தில் பிரபல இசையமைப்பாளர் உள்பட இருவர் பலி..!! அவிநாசியில் அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னையை சேர்ந்த நண்பர்களான தஷி என்கிற சிவக்குமார், மூவேந்திரன், தமிழ் அடியான், நாகராஜ் என 4 பேரும் ரியல் எஸ்டேட் பிசினஸ் சம்பந்தமாக கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளனர். அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பழங்கரை பகுதி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, ஆடி காரின் முன்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதியது.

இந்த விபத்தில், திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிய தஷி என்கிற சிவக்குமார் (49) சென்னையை பூர்வீகமாக கொண்ட ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் அடியான் (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ரியல் எஸ்டேட் அதிபரான நாகராஜ் (50) மற்றும் இயக்குனரான மூவேந்திரன் (வயது 55) ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திலிருந்து உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாகுடி கிராமத்தில் பிறந்தவர் தஷி என்கிற சிவக்குமார். இவருடைய தந்தை பாரதிமோகன். யார் குற்றவாளி, அத்தான் என்ற 2 திரைப்படங்களைத் தயாரித்து அதற்கு பாடல்களும் எழுதியவர். தனது தந்தையுடன் ஸ்டுடியோக்களுக்கு சென்று வந்த சிவகுமாருக்கு திரையுலகில் ஈர்ப்பு வந்தது. இதையடுத்து, பின்னணி இசைப்பிரிவில் முதலாக பணிக்கு சேர்ந்து சிறிது சிறிதாக முன்னேறினார்.

மலையாளப் படங்களில் பணியாற்றிய போது குட்டி கிருஷ்ணன் என்ற தயாரிப்பு நிர்வாகி அறிமுகமானார். அவரது பரிந்துரையில் சிவகுமாருக்கு ஒரு படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. தந்த்ரா என்ற அந்த படத்தின் பின்னணி இசைக்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற விருது அவருக்கு கிடைத்தது. திரை உலகத்திற்காக தனது பெயரை வீ.தஷி என்று மாற்றிக் கொண்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள தஷி, இதுவரையில் சுமார் 90 புது பாடகர்களையும், 160 பாடலாசிரியர்களையும் இசை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 49 வயதான அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’ரஜினி ஒரு சித்தர்’..!! ’எந்த கட்சிக்கும் ஆதரவு தராமல் சும்மா இருந்தாலே போதும்’..!! சொன்னது யார் தெரியுமா..?

Mon Sep 4 , 2023
மதுரை மாவட்டம் அண்ணாநகரில் உள்ள அம்பிகா திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்தின் 25-வது நாளையொட்டி ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி ரசிகர்கள் ரஜினியின் பேனர்களுக்கு மாலை அணிவித்து, சூடமேற்றி பூசணிக்காய் சுற்றி வழிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த நடிகர் சரவணனை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரவணன், “நடிகர் ரஜினிகாந்த் ஒரு சித்தர் போல. இன்று, […]

You May Like