உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் இருக்கும் பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, பெற்றோர், உடல்நல குறைவால் அவதிப்பட்ட தனது நான்கு வயது குழந்தையை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க டாக்டர்கள் மறுத்து விட்டனர்.
இதை தொடர்ந்து, வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு போகும்படி கூறி அனுப்பினர். அந்த வார்டில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் நீண்ட வரிசை இருந்தது. எனவே, வரிசையில் நீண்ட நேரம் பெற்றோர் நின்றனர். இந்நிலையில் அவசர சிகிச்சை தேவைப்பட்ட அந்த குழந்தை தந்தையின் மடியிலேயே உயிரிழந்தது.
பெற்றோர் இருவரும் குழந்தை உயிரிழந்ததால் துக்கம் பொறுக்க முடியாமல் கதறி அழுதனர். அது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது. அவசர சிகிச்சை தேவைப்படும்போது, அதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாத மற்றும் மருத்துவ வசதி கிடைக்காததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகம் ஏற்படுத்தியுள்ளது.