இங்கிலாந்து ராணியின் மறைவை அடுத்து புதிய மன்னரான சார்லஸ் உருவம்பொறிக்கப்பட்ட நாணயம் அந்நாட்டில் வெளியிடப்பட்டது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது 96 வயதில் செப்டம்பர் 8ம் தேதி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து 3ம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தேசிய கீதத்திலும் புதிய மன்னருக்கு ஏற்றவாறு வார்த்தைகள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களில் , நாணயங்களில் புதிய மன்னரின் உருவம் பொறிக்கப்பட வேண்டும். மன்னர் 3-ம் சார்லஸ் உருவம் பொறித்த நாணயங்களை ராயல்மிண்ட் வெளியிட்டுள்ளது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/சார்லஸ்-நாணயம்-1024x614.jpg)
பாரம்பரியத்திற்கு ஏற்பட மன்னரின் உருவப்படம் எதிர் திசையில் இடது பக்கம் உள்ளது. இனி இந்த நாணயமும் புழக்கத்தில் கொண்டுவரப்படும். எனினும் ராணியின் உருவம்பொறிக்கப்பட்ட நாணையமும் புழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற டிசம்பர் மாதம் முதல்இந்த நாணயம் படிப்படியாக புழக்கத்தில் கொண்டு வரப்படும் என்று ராயல் மிண்ட் தகவல் அளித்துள்ளது. புதிய மன்னர் உருவ நாணயங்களை பார்ப்பதில்மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.