ஓமலூர் அருகே சிறுவனை கடத்திச் சென்று தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவி, 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற நிலையில், திடீரென மாயமாகியுள்ளார். நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகனை காணவில்லை என கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
![காதலில் விழுந்த கல்லூரி மாணவி..! சிறுவனை கடத்தி சில்மிஷம்..! 3 மாத கர்ப்பத்தால் அதிர்ந்துபோன பெற்றோர்..!](https://1newsnation.com/wp-content/uploads/2021/04/sad_child-1024x677.jpg)
இந்நிலையில், பெற்றோர் ஹேபியஸ் கார்பஸ் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து, அந்த மாணவனுடன் நட்பாக இருந்தது யார்..? என போலீசார் விசாரிக்க தொடங்கினர். ஆனால், அந்த மாணவன் யாரிடமும் அதிகமாக பேசமாட்டான் என நண்பர்கள் தெரிவித்தனர். போலீசாரின் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் அந்த மாணவன் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போது அவருடன் இளம்பெண் ஒருவர் இருப்பதும் தெரியவந்தது.
![காதலில் விழுந்த கல்லூரி மாணவி..! சிறுவனை கடத்தி சில்மிஷம்..! 3 மாத கர்ப்பத்தால் அதிர்ந்துபோன பெற்றோர்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/06/love-sunset-together-preview.jpg)
இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இருவரும் கல்லூரியில் படித்தபோது காதலில் விழுந்துள்ளனர். மாணவன் சூர்யாவின் அழகில் அந்த மாணவி மயங்கினார். திருமணம் செய்துகொண்டு வாழலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். அந்நேரத்தில் அந்த கல்லூரி மாணவனுக்கு 18 வயது முடிய 3 மாதம் இருந்தது. அப்படி இருந்த போதிலும் இவர்களது காதல் கண்ணை மறைத்தது. இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
![காதலில் விழுந்த கல்லூரி மாணவி..! சிறுவனை கடத்தி சில்மிஷம்..! 3 மாத கர்ப்பத்தால் அதிர்ந்துபோன பெற்றோர்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/06/Sex.jpeg)
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளது தெரியவந்தது. கல்லூரி மாணவன் வீட்டிலிருந்து மாயமான நேரத்தில் அவர் சிறுவன். எனவே, சிறுவனை கடத்திச்சென்று திருமணம் செய்த கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தை திருமணம், சிறுவனை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். அந்த கல்லூரி மாணவி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.