ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி இஸ்லாமிய மக்கள் குறித்த கருத்துக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. வாக்கு வங்கி அரசியலுக்காக, நாட்டின் உயர்பதவியில் இருக்கும் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்துவது, இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல என்றும்.
இஸ்லாமிய மக்களின் மனது புண்படும் படி இத்தகைய கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையது அல்ல என்றும், அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.