திரையரங்கின் கட்டணங்கள் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், ஸ்ரீதர் கொடுத்த மனுவில்; மல்டி பிளக்ஸ் ஏசி தியேட்டரில் 150 ரூபாய் டிக்கெட்டை 250 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என்றும் மல்டி பிளக்ஸ் ஏசி இல்லாத தியேட்டரில் குறைந்தபட்ச கட்டணத்தை 150 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என்றும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏசி இல்லாததியேட்டர்களில் கட்டணத்தை 80 ரூபாயில்இருந்து 120 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு திரையரங்கின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்பொழுது மீண்டும் டிக்கெட்டின் விலை உயர்த்தப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.