fbpx

டிப்ளமோ படித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Bharat Heavy Electricals Limited) வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மூலம் மேற்பார்வையாளர் பயிற்சியாளர் பதவிக்கு, 3 வெவ்வேறு பிரிவுகளில் மொத்தம் 65 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி: Supervisor Trainee (சிவில்) : சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ.
Supervisor Trainee (மெக்கானிக்கல்) : மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ.
Supervisor Trainee (HR) : MBA (முதுகலை வணிக நிர்வாகம்) அல்லது மனித வளத்தில் டிப்ளமோ (HR) ஆக இருக்க வேண்டும்.

தேர்வு முறை :b Supervisor Trainee பதவிக்கான தேர்வு செயல்முறை கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு என 2 நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த தேர்வில் குறைந்தபட்சம் கட் ஆஃப் மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே 2ஆம் கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் .

சம்பளம் : இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.32,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் : இந்த பணிக்கு விண்ணப்பிக்க ரூ.795 செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்: விண்ணப்பம் சமர்பிப்பதற்கான கடைசி தேதி நவ.25 ஆகும். ஆன்லைன் எழுத்து தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்ட தேதி : டிசம்பர் 2023

ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது?

* BHEL-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

* இணையதளத்தில் “Recruitment of Supervisor Trainee 2023” என்ற பகுதியைப் பார்க்கவும்.
"Click here to apply online" என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

* பின்னர், நீங்கள் ஆன்லைன் விண்ணப்ப போர்ட்டலுக்கு அனுப்பப்படுவீர்கள். இங்கே, நீங்கள் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால் பதிவு செய்ய வேண்டும் அல்லது உள்நுழைய வேண்டும்.

* விண்ணப்பப் படிவத்தில் தேவையான உங்கள் அடிப்படை மற்றும் கல்வி விவரங்களை நிரப்பவும்.

* உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Chella

Next Post

தீபாவளியை முன்னிட்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை..!! லிஸ்டை வெளியிட்ட சிஇஓ சுந்தர்பிச்சை..!!

Tue Nov 14 , 2023
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 12ஆம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தற்போதைய கால கட்டத்தில் பண்டிகை அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது நமது மக்கள் கூகுளை நாடுவது வழக்கமாகவே மாறிவிட்டது. அந்தவகையில், இந்த தீபாவளிக்கு மக்கள் அதிகளவில் கூகுளில் என்ன தேடினார்கள் என்பதை கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்தியர்கள் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்? தீபாவளிக்கு ஏன் ரங்கோலி வரைகிறோம்? […]

You May Like