fbpx

90% ஊழியர்களை பணியிலிருந்து நீக்கிய பிரபல நிறுவனம்..!! என்ன காரணம் தெரியுமா..?

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள டூகான் நிறுவனம் 90% ஊழியர்களை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

சமீபகாலமாக இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து வேலைநீக்க செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்தியாவில் உள்ள மொபைல் செயலி நிறுவனங்களில் ஒன்றான டூகான் என்ற ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரிந்த 90% ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன் வேலை நீக்க நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் 90% ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில்லறை தொழில்நுட்ப தளத்தில், தங்கள் பிராண்டுகளை அதிகரிக்க கவனம் செலுத்த இருப்பதாகவும், நிறுவனத்தின் வருமானம் குறைந்து உள்ளதால் பணிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாதனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு சாதனங்களை பயன்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர் சேவைச் செலவு 85% குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் கூறும் குறைகளை சரி செய்யும் நேரமும் 120 நிமிடங்களில் இருந்து 3 நிமிடமாக குறைத்து விட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

Chella

Next Post

5 கிலோ உடல் எடையை குறைத்த ஹிட்மேன் ரோகித்!... தன்னை விமர்சித்தவர்களுக்கு செம பதிலடி!... வைரல் புகைப்படம்!

Wed Jul 12 , 2023
உடல் பருமனைப் பார்த்து பலர் விமர்சனம் செய்துவந்த நிலையில், 5 கிலோ வரை உடல் எடையை குறைத்து மாஸ் காட்டியுள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா உடல் எடை அதிகமாக இருந்தாலும் பேட்டிங்கில் பட்டையை கிளப்புவார். ஆனால், சமீப காலங்களாக தன்னுடைய விளையாட்டில் அவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் பலரது விமர்சனங்களை பெற்று […]

You May Like