fbpx

விமானத்தில் பிரபல நடிகையை சீண்டிய சக பயணி..!! பாலியல் ரீதியாக தொல்லை..!! அதிர்ச்சி பதிவு..!!

மலையாள நடிகை திவ்ய பிரபா கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மும்பையில் இருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது, சக பயணியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதையும், இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளது பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அளித்துள்ள புகாரில், ‘என் அருகில் குடித்து விட்டு அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், எந்தவிதமான லாஜிக்கும் இல்லாமல் விவாதம் செய்ய ஆரம்பித்தார். என்னை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார். இதுகுறித்து, நான் விமானப் பணிப்பெண்ணிடம் சொன்னபோது, அவர்கள் எடுத்த ஒரே நடவடிக்கை அவரது இருக்கையை மாற்றியது மட்டுமே.

விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் அதே வேளையில், சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். திவ்யாவின் இந்த புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரையுலகைச் சேர்ந்தவர்களும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.

Chella

Next Post

மாமியார் வீட்டில் மருமகள் செய்த காரியம்; அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..

Wed Oct 11 , 2023
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம், அன்னை தெரசா பகுதியைச் சேர்ந்தவர் அற்புதராஜ். பேன்சி கடை ஒன்று நடத்தி வரும் இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், தங்கதுரை என்ற மகனும் உள்ளனர். தங்கதுரை தனது மனைவி அஸ்வினி மற்றும் 5 வயது மகளுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர் தனது மனைவி மற்றும் மகளை முத்தையாபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் விட்டுவிட்டு சென்னைக்கு வேலைக்கு […]

You May Like