fbpx

பெரும் சோகம்!… தெருநாய்கள் தாக்கியதில் பிரபல தொழிலதிபர் உயிரிழப்பு!

தெருநாய்கள் தாக்கியதில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல தொழிலதிபரும், வாஹ் பக்ரி தேயிலை குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் உயிரிழந்தார்.

குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பராக் தேசாய், 49, வாக் பக்ரி டீ குழுமத்தின் நிர்வாக இயக்குனரான இவருக்கு, விதிஷா என்ற மனைவியும், பரிஷா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி வழக்கம் போல் நடைப்பயிற்ச்சி சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். வீடு அருகே வந்த போது அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் இவரை சூழ்ந்து கொண்டு கடித்து குதறின. நாய்களிடமிருந்து தப்பித்து ஓட முயன்ற போது கீழே விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள ஷெல்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஒரு நாள் கண்காணிப்புக்குப் பிறகு, அறுவை சிகிச்சைக்காக Zydus மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு 7 நாட்களாக வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்படி தொடர்ந்து 9 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களின் தாக்குதலும், அதனை கட்டுப்படுவதில் அரசுகள் காட்டும் அலட்சியமும் பல பகுதிகளில் தொடர் கதையாகி வருகின்றன. தெரு நாய்கள் தாக்கியதில் தொழிலதிபர் பராக் தேசாய் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

மலை உச்சியில் இருக்கும் கிராமம்!… ஆனால் மழையே பெய்யாத அவலம்!… காரணம் என்ன தெரியுமா?

Tue Oct 24 , 2023
நிலத்தில் இருந்து நீர் ஆவியாகி பூமியின் வளிமண்டலத்தில் குளிர்ந்து மேகங்களை உருவாக்குகிறது. இந்த மேகங்கள் போதுமான அளவு கனமாக இருக்கும்போது, ​​​​குளிர்காற்று படும்போது அவை மழை வடிவத்தில் பூமியில் விழுகின்றன. உலகின் அனைத்து பகுதிகளும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மழையைப் பெறுகின்றன. ஆனால் உலகில் மழையே பெய்யாத இடம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அது எப்படி இருக்க முடியும். எல்லா இடங்களிலும் லேசான மழையாவது பொழியுமே என்று நீங்கள் […]

You May Like