fbpx

விசாரணையில் அதிர்ச்சி…! ஏரியாவில் பிரபலமாக சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது அம்பலம்…!

ஏரியாவில் பிரபலமாக சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசிய, இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணம், மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இவருக்கு மாலதி என்ற மனைவியும், இனியன் என்ற மகன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் சக்கரபாணி, இந்து முன்னணியில் கும்பகோணம் மாநகரச் செயலாளராகப் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், சக்கரபாணி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தனது வீட்டின் முன்ப ாக வருமானவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை ஏற்று உடனடியாக விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் என்பதை விசாரிக்க தொடங்கினர். போலீசார்ம் சந்தேகத்தின் பெயரில் சக்கரபாணியிடம் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. கும்பகோணம் பகுதியில் தன்னுடைய பெயர் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக தானே இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இத அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Vignesh

Next Post

#ஜோதிடம்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

Tue Nov 22 , 2022
மேஷம்: வாழ்க்கைக்கு தேவையான சில முக்கிய தீர்மானங்களை எடுப்பார்கள். மேலும் பணம் கடன் வாங்குவது கொடுப்பது என எந்த பரிவர்த்தனையையும் இன்று மேற்கொள்ள வேண்டாம். இளைஞர்கள் செய்யும் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் வேலைப்பளு அதிகமாக இருக்க கூடும்.  ரிஷபம் : ஆன்மீக வழிபாடு மன மகிழ்ச்சியை இன்றைய நாளில் தரும். சொத்துகள்  தொடர்பான தீர்வு வெற்றி தரும். நிதி முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் எவ்வித முடிவையும் […]
அடுத்த ஆண்டு மேலும் ஒரு கொடிய வைரஸ் பரவும்..! பஞ்சாங்க கணிப்பாளர்கள் எச்சரிக்கை..!

You May Like