ஏரியாவில் பிரபலமாக சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசிய, இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கும்பகோணம், மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இவருக்கு மாலதி என்ற மனைவியும், இனியன் என்ற மகன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் சக்கரபாணி, இந்து முன்னணியில் கும்பகோணம் மாநகரச் செயலாளராகப் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், சக்கரபாணி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தனது வீட்டின் முன்ப ாக வருமானவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்று உடனடியாக விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் என்பதை விசாரிக்க தொடங்கினர். போலீசார்ம் சந்தேகத்தின் பெயரில் சக்கரபாணியிடம் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. கும்பகோணம் பகுதியில் தன்னுடைய பெயர் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக தானே இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இத அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.